கந்தர்வகோட்டை - Gandharvakottai

விஷம் குடித்து பெண் தற்கொலை!

விஷம் குடித்து பெண் தற்கொலை!

கீரனூர் அருகே புலியூரை சேர்ந்தவர் ரமேஷ் (40). போர்வெல் டிரைவராக வெளியூரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி வயது (37) இவருக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் நாட்டு மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கணவர் ரமேஷ்க்கு போனில் தெரிவித்துள்ளார். உடன் உறவினர்களுடன் அங்கு வந்த ரமேஷ் சரஸ்வதியை கீர னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சரஸ்வதியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீடியோஸ்


புதுக்கோட்டை