புதுச்சேரி - Puducherry

முள்ளிவாய்க்கால் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழ மண் முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதத்தில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டார்கள். அந்தப் பேரழிவை மறக்காமல் இருக்கவும், அப்படுகொலைக்கு நீதி கிடைக்கவும், தமிழீழ மண் விடுதலை பெறவும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் ராஜா திரையரங்கம் அருகில் முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் மெழுகு வர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்காலில் நடந்தது போர்க்குற்றம், இனப் படுகொலை, சர்வதேச விசாரணை வேண்டும். படுகொலைக்கு ஆளான தமிழீழ மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, போர்க்குற்றம் சர்வதேச விசாரணை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மலரஞ்சலி நிகழ்வுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா. வேலிறையன் (எ) வேல்சாமி தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் தமிழன்பன், அரங்கதுரை, மோகன்தாசு பெர்னாட்சா, பாகூர் அன்புநிலவன், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்

புதுச்சேரி
May 19, 2024, 09:05 IST/புதுச்சேரி
புதுச்சேரி

முள்ளிவாய்க்கால் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

May 19, 2024, 09:05 IST
தமிழீழ மண் முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதத்தில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டார்கள். அந்தப் பேரழிவை மறக்காமல் இருக்கவும், அப்படுகொலைக்கு நீதி கிடைக்கவும், தமிழீழ மண் விடுதலை பெறவும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் ராஜா திரையரங்கம் அருகில் முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் மெழுகு வர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்காலில் நடந்தது போர்க்குற்றம், இனப் படுகொலை, சர்வதேச விசாரணை வேண்டும். படுகொலைக்கு ஆளான தமிழீழ மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, போர்க்குற்றம் சர்வதேச விசாரணை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மலரஞ்சலி நிகழ்வுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா. வேலிறையன் (எ) வேல்சாமி தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் தமிழன்பன், அரங்கதுரை, மோகன்தாசு பெர்னாட்சா, பாகூர் அன்புநிலவன், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்