ஊர்காவல் படை வீரர்களுக்கு பணியானை வழங்கிய முதலமைச்சர்
புதுச்சேரியில் புதிதாக 500 ஊர்க்காவல்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல் கட்டமாக 326 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. காவல்துறை டிஜிபி ஸ்ரீநிவாஸ் வரவேற்றார். முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பணி ஆணைகளை வழங்கினர். எம்எல்ஏ அனிபால் கென்னடி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.