புதுவை சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினர் வெளியேற்றம்

75பார்த்தது
புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரின் 10-ம் நாள் கூட்டம் இன்று காலை 9. 30 மணிக்உ துவங்கியது. கேள்வி நேரத்தில் எதிர்கட்சி திமுக எம்எல்ஏ சிவா எழுந்து சிபிஐ-யால் பொது பணித்துறை தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தபட்ட துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரினர்.

அதற்கு சபாநாயகர் அமைதியாக இருக்கும்படி கூறினார். இதற்கு பதில் அளிக்காததால் சபாநாயகர் இருக்கை முன் திமுக எதிர்கட்சி தலைவர் சிவா உள்பட திமுக, காங்கிரஸ் எம். எல். ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டு அமைச்சர் பதவி விலக கோரி கோஷம் எழுப்பினர். அப்போது சபாநாநகர் செல்வம் த்ர்ணாவில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சபை காவலர்கள் எதிர்கட்சி தலைவர் சிவாவை குண்டுகட்டாக வெளியே தூக்கி வந்தனர். தொடர்ந்து திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி