மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச 3 சக்கர பைக் வழங்கிய அமைச்சர்

76பார்த்தது
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் ஊசுடு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு புதுச்சேரி அரசின் விலையில்லா மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி ஊசுடு சட்டமன்ற தொகுதி பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான சாய் ஜெ சரவணன் குமார் தலைமை தாங்கி
ஊசுடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகள் 8 நபர்களுக்கு புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் விலையில்லா மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய் ஜெ தியாகராஜன், தொகுதி தலைவர் முத்தாலு முரளி, தொகுதி தலைவி மல்லிகா, சமூக நலத்துறை அதிகாரிகள் அன்பரசன், சுருதி, ஊசுடு தொகுதி சமூக நலத்துறை பொறுப்பாளர் கவிதா, உட்பட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி