ரேசன் அரிசியில் எலி எச்சங்கள் - மக்கள் அதிர்ச்சி

1066பார்த்தது
தமிழக முழுவது ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசால் நியாய விலை கடைகளில் அரிசி இலவசமாக வழங்கி வருகிறது. இதனை பல்லாயிரம் கணக்கான மக்கள் வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் மகளிர் நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் அரிசி, பருப்பு, ஆயில், சக்கரை போன்ற உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பந்தலூர் பகுதியில் உள்ள மகளிர் நியாய விலை கடையில் வழங்கிய அரிசியில் எலி எச்சங்கள், சனல் கயிறு, காங்கிரட்கற்கள் போன்றவை கிடந்ததை கண்டு பயனாளி அதிர்ச்சியடைந்தார். பின்பு அரிசியை நியாய விலை கடை ஊழியரிடம் கேட்ட போது நான் என்ன செய்ய முடியும், அரிசி குடோனில் இப்படி குப்பை கூலுமாக தருகின்றனர்.

அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றும், விருப்பமிருந்தால் வாங்ககுகள், இல்லை எனில் திரும்பி போங்க என நியாய விலை கடை ஊழியர்கள் அலட்சியமாக கூறி உள்ளனர். ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழக அரசு நியாய விலைக் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கி வரும் நிலையில் எலி எச்சங்கள், கற்கள் போன்றவையுடன் நியாய விலை கடை ஊழியர்கள் வழங்குவது பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தமிழக அரசு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி