உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு

57பார்த்தது
உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு
உலகளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. இவர்களில் 20% மட்டுமே காது கேட்கும் கருவிகள் இருப்பதாகவும், 2050ல் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித்திறன் பாதிப்பு இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹெட்ஃபோன்கள் மூலமாக சத்தமான இசை கேட்பதால் நூறு கோடி இளைஞர்கள் நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி