தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்குச்சாவடிக்கு வந்தார் எனக்கூறி நடிகர்
விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ள அவர், தேர்தலில் வாக்களிக்க நடிகர்
விஜய் 200க்கும் அதிகமான நபர்களுடன் வந்ததால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாவும், தேர்தல் நாளில் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்த
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.