ஊழலின் கூடாரமாக்கிவிட்ட பாஜக, அதன் தலைவர்களுக்கு ஊழல் கிராஷ் கோர்ஸ்களை கட்டாயமாக்கியிருக்கிறது. அதற்கான கட்டணத்தை இந்த நாடு செலுத்துகிறது என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில், பிரதமர் மோடி, நாட்டில் ஊழல் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். ஒட்டுமொத்த ஊழல் அறிவியல் என்ற பாடத்தின் கீழ், அவரே ஒவ்வொரு பாடத்தையும், நன்கொடை வணிகம் உள்பட அனைத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.