இராசிபுரம்: உலக செவிலியர் தினம் - மரியாதை செலுத்தப்பட்டது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ராசிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் செவிலியர்களான சங்கீதா & பிரியா மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியரான பவித்ரா ஆகியோர்களுக்கு சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ் மற்றும் கார்த்தி சார்பாக பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.