கீழ்வேளூர் - Kilvelur

குடிசையில் வாழ்ந்த மூதாட்டி உயிரிழந்தது எப்படி?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பாலக்குறிச்சி வயல்வெளி அருகே கடந்த 13 ஆம் தேதி துர்நாற்றம் விசுவதாக, ஆடு மாடு மேய்க்க சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். குறிச்சி கிராமத்தில் தனியே ஒற்றை குடிசையில் வசித்த கிரேஸ் என்ற மூதாட்டியை 10 நாட்களாக காணவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் காவல்துறை விசாரணை செய்ததில் தெரியவந்தது. பின்னர் அந்த மூதாட்டியின் ஜெப மாலை, காலணியை வைத்தும், மருத்துவ உடற்கூறு ஆய்வு சோதனையை வைத்தும் உயிரிழந்தது கிரேஸ் என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் பிறந்த கிரேஸ், சிங்கப்பூர் வேலைக்கு சென்றபோது பிலிப் ஜேசுதாஸ் என்பவரை திருமணம் செய்து சிங்கப்பூர் சிட்டிசனாக மாறினார். 2 மகன்கள், 2 மகள்கள் பிறந்த நிலையில் அனைவருமே வெளியூரில் திருமணம் செய்துவிட்டு சென்ற நிலையில், ஒரே மகன் சிங்கப்பூரில் இருக்கும் பிரபல நாடக நடிகர் , யூட்யூப் புகழ் சிங்கை துரைராஜ் என்பவர் குறிச்சியில் பல லட்சரூபாய்க்கு பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். ஆனால் அந்த வீட்டை பூட்டி இருக்கும் நிலையில் தாய் கிரேஸ் கூரை வீட்டில் வசித்து வந்தது பெரிய வந்துள்ளது

வீடியோஸ்


நாகப்பட்டினம்
சென்டிப்பூ சாகுபடியினை தோட்டக்கலை அலுவலர் நேரில் ஆய்வு
Mar 22, 2025, 02:03 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

சென்டிப்பூ சாகுபடியினை தோட்டக்கலை அலுவலர் நேரில் ஆய்வு

Mar 22, 2025, 02:03 IST
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி பகுதியில் மாநில தோட்டக்கலைத்துறை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 3 மாத பயிராக செந்திப்பூ விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களை திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் ஆய்வு செய்தார்.  அப்போது அவர் கூறியதாவது: - விவசாயிகள் டெல்டா பகுதிகளில் நெல், பயறு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு மாற்று பயிராக மூன்று மாத கால பயிரான செந்திப்பூ சாகுபடியினை சோதனை அடிப்படையில் ஒன்றியத்துக்குட்பட்ட 10 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் அளவிற்கு சாகுபடி செய்ய அறிவுறுத்தி தற்போது சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர்.  இதன் மூலம் விவசாயிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 15 கிலோ வரை அறுவடை செய்வதாகவும் பூவின் விலை ரூ. 50 வரை கிடைப்பதாகவும், பூ வியாபாரிகள் வீட்டிற்கே வந்து பூக்களை எடுத்துச் செல்வதாகவும் இதனால் செலவில்லாமல் லாபம் ஈட்டி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.  இதேபோல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் முன்வந்து மாற்று பயிராக தோட்டக்கலை காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார். தொடர்ந்து வெண்டை, கத்தரி, பீர்க்கன், வெள்ளரி சாகுபடி செய்துள்ள வயலைப் பார்வையிட்டு உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.