கீழ்வேளூர் - Kilvelur

காரில் வந்து ஆடுகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள்

நாகை அருகே வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை நள்ளிரவில் காரில் வந்து ஆடு திருடர்கள் திருடிச் செல்லும் பரப்பரப்பு சிசிடிவி காட்சிகள்* நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக வீடுகளில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இந்த நிலையில் வேளாங்கண்ணி அடுத்த தெற்குபொய்கை நல்லூரில் சண்முக பாண்டியன் என்பவரது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த ஆடுகளை காரில் வந்து திருடிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த காட்சியில் தெற்கு பொய்கை நல்லூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலையில் காரில் வரும் ஆடு திருடர்கள் சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய மூன்று நபர்கள் வீட்டில் கட்டி வைக்கப்பட்ட ஆடுகளை அவிழ்த்து தூக்கி சென்று காரில் ஏற்றிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சண்முக பாண்டியன் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு காரில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளில் கட்டப்பட்டுள்ள ஆடுகளை காரில் வந்து திருடும் திருடர்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அது குறித்தான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

வீடியோஸ்