கீழ்வேளூர் - Kilvelur

திருக்குவளையில் திமுகவினர் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா திருக்குவளையில் அவர் பிறந்த இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்டது. நாகை மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள அவரது தந்தை முத்துவேலர் தாயார் அஞ்சுகம், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து திருக்குவளை கடைவீதி பகுதியில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது தொடர்ந்து திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலினை நாகை மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான என். கௌதமன் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து திருக்குவளை கருணாலயா முதியோர் இல்லத்தில், வசிக்கும் முதியோர்களுக்கு திமுக இளைஞரணி சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Jun 03, 2024, 05:06 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

Jun 03, 2024, 05:06 IST
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா மகாராஜபுரம் மேல்பாதி பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜையில் பூர்ணா ஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.