மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்த காத்திருக்க இன்று (ஏப். 2) மாலை மதுரையின் சுற்றுவட்டார பகுதியில் நாகமலை புதுக்கோட்டை, உசிலம்பட்டி , பேரையூர், திருமங்கலம் , பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தூரல் மழை சிறிது நேரம் பெய்தது. கனமழையை எதிர்பார்த்த மக்களுக்கு இந்த மழை ஏமாற்றத்தையே கொடுத்தது. இனிவரும் நாட்களில் கனமழையை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.