உசிலம்பட்டி - Usilampatti

டிராக்டரை அடித்து நொறுக்கிய இருவர் கைது

டிராக்டரை அடித்து நொறுக்கிய இருவர் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அருகே டிராக்டரை அடித்து நொறுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் பணியில் ஜெயக்குமார் என்பவர் ஈடுபட்டு வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கழுவன் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.,18) மாலை அவரது தொழிற்சாலையில் நுழைந்த கழுவன், இந்தர்ஜித் ஆகியோர் டிராக்டரில் அடுக்கி இருந்த ஹாலோ பிளாக் கற்கள் உடன் டிராக்டர் அடித்து நொறுக்கினர்கள். இதுகுறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உசிலம்பட்டி போலீசார் 2 பேரையும் நேற்று (செப்.,19) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా