காழ்ப்புணர்ச்சி தேவையில்லை; திமுக எம்.பி பேட்டி

51பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேர்தலில் வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் தேனி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வன் இன்று (ஆக.,31) பரப்புரையை துவங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழ்நாடு விளையாட்டுதுறையில் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது அதை பெருமைபடுத்தும் விதமாக இன்று கார் பந்தயம், உலக அளவில் வீரர்களை வரவழைத்து மிக பெரிய கார் பந்தயம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இன்று (ஆக.,31) மக்கள் பார்வைக்கு இலவசமாகவும், நாளை (செப்.,1) கட்டணமாகவும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாக இந்த கார் பந்தயம் சிறப்பு மிக்க பந்தயம் என்றே சொல்ல வேண்டும்.

நீதிமன்றம் கூட பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த சொல்லியுள்ளது. , உதயநிதி ஸ்டாலினும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தான் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியையும் நடத்துகிறார். இதில் யாருக்கும் காழ்ப்புணர்ச்சி தேவையில்லை என்றார்.

உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி