அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

73பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு உசிலம்பட்டி வட்டார அளவில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு ஊழியர்களும் இரண்டு மூன்று அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சூழல் நிலவிவருவதாகவும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரியும், அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரியும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி