உசிலம்பட்டியில் ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்.

57பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஓபிஸ் அணியை சேர்ந்த அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மதுரை உசிலம்பட்டியில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் ஆலோசனை படி இன்று (ஆக. 23) காலை கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமை தாங்கினார். உடன் மதுரை மாவட்ட அதிமுக, மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை சனிக்கிழமை அதிமுகவினர் செக்கானூரணியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி