நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி.

74பார்த்தது
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி
300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உயர்நிலைப் படிப்பு தொடர முடியாமல் இருந்த மாணவ மாணவிகளை கண்டறிந்து, அவர்களை இந்நிகழ்ச்சியின் மூலம் ஒன்றிணைத்தனர்.
பின்னர் மாணவ மாணவிகளுக்கு திட்டத்தினால் ஏற்படும் நன்மைகளை பற்றி விளக்க உரையை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குளல் அவர்கள் எடுத்துரைத்தார்.
இதில் பொருளாதார ரீதியாகவும், பல்வேறு காரணங்களாலும் தன்னுடைய உயர் மேற்படிப்பை தொடர முடியாமல் உள்ள மாணவ மாணவிகள்
இந்த கூட்டத்தில் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏழை எளிய மாணவ மாணவிகளின் மேற்படிப்பை தொடர்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யப்படும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை, கல்லாவி, சாம்பல்பட்டி, குன்னத்தூர், சிங்காரப்பேட்டை, காரப்பட்டு போன்ற சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி