குளச்சல் - Kulachal

கடன் தொல்லை; பெண் விஷம் குடித்து தற்கொலை

கடன் தொல்லை; பெண் விஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதி சரல்விளை என்ற இடத்தை சேர்ந்தவர் சேவியர்ராஜ் மனைவி அனிதா பாய் (41). சேவியர் ராஜ். வெளிநாட்டில் வேலை செய்து வருகிகிறார். அனிதாபாய் அக்கம் பக்கத்தினரிடம் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன்காரர்கள் வாங்கிய கடனை திருப்ப கேட்டு, நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அனிதா பாய் மன வருத்தத்தில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்.,18) வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் அனிதா பாய்  காணப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.,19) அதிகாலை அனிதா பாய் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் சோபி என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా