குடிநீர் குழாய் உடைப்பு: 30 அடி உயரத்தில் சீறிய குடிநீர்

2593பார்த்தது
காப்பிக்காடு அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து புதுக்கடை, கிள்ளியூர், கருங்கல், திங்கள்நகர், இரணியல் நெடுஞ்சாலை வழியாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடலோர கிராமங்கள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளை இணைக்கும் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக இந்த குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரணியல் வள்ளியாற்று பாலம் அருகே பதிக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது. சுமார் 30 அடி உயரத்திற்கு மேலே சென்ற தண்ணிரால் வாகனங்கள், பயணிகள் நனைத்தவாறு சென்றனர். இதை எடுத்து அந்த உடைப்பு உடனடியாக சரி செய்யபட்டது ஆனால் தற்போது நீர் வீணாகும் காட்சிகள் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி