குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் - அதிகாரிகள் விசாரணை

81பார்த்தது
குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் - அதிகாரிகள் விசாரணை
புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலந்த நிலையில் நேற்று முன்தினம் மாட்டு சாணம் கலந்த குடிநீர் வந்ததாக தகவல் பரவியது. தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கு சென்று விசாரித்தனர். மேலும், அந்த குடிநீர் தொட்டி கழுவி சுத்தம் செய்யப்பட்டது. தொட்டியில் இருந்து மாதிரி சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவு வந்த பிறகே என்ன மாதிரியான கழிவு கலக்கப்பட்டது என்றவிவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி