அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

52பார்த்தது
அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் மேட்டு காலனி, வடக்கு காலனி, வெங்கடேஷ் புறம், எம்ஜிஆர் நகர், மற்றும் பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து மலர் தூவி ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் இந்த நிகழ்ச்சியினை அச்சரப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் முருகதாஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் , மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி