ஓபிஎஸ் காரில் பறக்கும்படை சோதனை

73பார்த்தது
ஓபிஎஸ் காரில் பறக்கும்படை சோதனை
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் காரணமாக அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்காக ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்தார். அப்போது, குஞ்சார்வலசை என்னும் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஓபிஎஸ் காரை மடக்கி சோதனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி