வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகரை மாமல்லபுரம் போலீசார் கைது

62பார்த்தது
சீர்காழி சத்யாவை போலீசார் சுட்டு பிடித்ததைத் தொடர்ந்து, வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குவிந்ததால் பரபரப்பு.

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய போலீசாரால் தேடப்படும் குற்றவாளி சீர்காழி சத்யாவை போலீசார் சுட்டுப் பிடித்தனர் அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் அலெக்சஸ் சுதாகரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வருவதாக கேள்விப்பட்டதை அறிந்த 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு குவிந்தனர். பின்னர் வழக்கறிஞர் அலெக்ஸை அழைத்து வந்த வாகனத்தின் முன்பு முற்றுகையிட்டு, போலீஸை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வேனிலிருந்து வழக்கறிஞர் அலெக்ஸை இறக்கி நீதிமன்றத்தினுள் அழைத்து வந்த போது வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்குமிடையே கடும் வாக்குவாதத்துடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் வழக்கறிஞர் அலெக்ஸை நீதிபதி கதிரவன் முன்பு ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதியின் பரிந்துரையின் பேரில் அவரை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் வழக்கறிஞர் அலெக்ஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி