ரிஷிவந்தியம் - Rishivandiyam

தியாகதுருவம்: திருநங்கை உட்பட நான்கு பேர் கைது

தியாகதுருவம்: திருநங்கை உட்பட நான்கு பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்குளம் கிராமம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பழனியப்பன் த/பெ சின்னப்ப கவுண்டர் என்பவர் கடந்த 22. 09. 2024 அன்று வரதப்பனூர் கிராமத்திற்கு தனது அண்ணன் மகன் காளியப்பன் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது வீரசோழபுரம் அருகில் இருசக்கர வாகனத்தை மூன்று பேர் வழிமறித்து கொடுவாளை காண்பித்து மிரட்டி அவரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் பழனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்த நிலையில் திருநங்கை ஒருவர் கொடுத்த ரகசிய தகவலின் வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், (19 ) என்பவனையும் ரோடு மாமானந்தல் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மா (21) அசோக் ( 22 ) ஆகிய இருவர் மேலும், திருநங்கை மோபினா வயது 20 உள்ளிட்ட நான்கு பேரையும் உள்ளிட்ட காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி