நோயாளியின் உறவினரை கத்தியால் தாக்கிய டாக்டர்

62பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த புதுமாம்பட்டை சேர்ந்தவர் சேட்டு. இவர், பல் வலியால் சிரமப்பட்ட தனது மகளை தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை அளிக்க 2, 500 ரூபாய் செலவாகும் என டாக்டர் தெரிவித்துள்ளார். சிகிச்சை அளிப்பது தொடர்பாக டாக்டருக்கும், சேட்டுக்கும் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த சேட்டுவின் சகோதரர் மணிகண்டன் மருத்துவமனைக்கு சென்று, நடந்த பிரச்னை தொடர்பாக டாக்டரிடம் கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், டாக்டர் அருகில் இருந்த கத்தியை எடுத்து மணிகண்டனை தாக்கி உள்ளார். காயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இது தொடர்பாக தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி