ரேஷன் அரிசி கடத்தவர் கைது

57பார்த்தது
திருக்கோவிலுார் டி. எஸ். பி. , பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு 9: 00 மணி அளவில் ரோந்து சென்றனர். அரும்பாக்கம் - கனகநந்தல் சாலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற மினி வேனை மடக்கி சோதனை செய்தனர்.


அதில் 15 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், சுவலவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் வேல்முருகன், 24; என்பவர் கடத்தி வந்தது தெரிந்தது.


அவரை கைது செய்து, அரிசியுடன் வேனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், கள்ளக்குறிச்சி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி