பைக்கில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

57பார்த்தது
கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் சேர்ந்த கண்ணன் மனைவி மலையம்மாள், 65; உடல் நிலை சரியில்லாத இவரை அவரது மகன் சிவக்குமார், கடந்த மாதம் 27ம் தேதி மாலை 4 மணிக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்து சென்றார். பின் மீண்டும் வீட்டிற்கு பைக்கி திரும்பினர்.

ரோடுமாமந்துார் ஆற்றுபாலம் அருகே வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி மலையம்மாள் கீழே விழுந்துள்ளார்.


இதில் படுகாயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.


புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி