தே. மு. தி. க. , சார்பில் முப்பெரும் விழா

78பார்த்தது
திருக்கோவிலூர் அடுத்த தனகனந்தல் ஊராட்சியில் தே. மு. தி. க. , சார்பில் முப்பெரும் விழா நடந்தது.




திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய தே. மு. தி. க. , சார்பில், கட்சியின் 20ம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, பத்மபூஷன் பெற்றதற்கான பாராட்டு விழா என முப்பெரும் விழா தனகனந்தல் ஊராட்சியில் நடந்தது. மாவட்ட பிரதிநிதி முனியன் வரவேற்றார். கிளைக் செயலாளர் முனுசாமி, ஊராட்சி கழக செயலாளர்கள் ஜெயபாலன், ஏழுமலை, அசோக் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு வேட்டி சேலை, இனிப்புகளை வழங்கினார். மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.


மாவட்டத் துணைச் செயலாளர் தவமணி, ஒன்றிய அவை தலைவர் நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஏழுமலை, பாஸ்கர், ஒன்றிய வழக்கறிஞர் செயலாளர் ராஜி, ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் சடையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி