மரத்தில் ஆட்டோ மோதி விபத்து முதியவர் பலி: 10 பேர் படுகாயம்

68பார்த்தது
திருக்கோவிலுார் அருகே புளிய மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் முதியவர் இறந்தார் 10 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி முத்தாள், 45; நாகமணி, 60; மணிகண்டன் மனைவி மகேஸ்வரி, 40; உள்ளிட்ட அதே ஊரைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என பலர் ஆதிதிருவரங்கம், அரங்கநாதர் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.


பாதயாத்திரையில் நடக்க முடியாத 10 பேர், உடன் வந்த ஆட்டோவில் பயணித்தனர். ஆட்டோவை மாம்பழப்பட்டு ஆறுமுகம் மகன் அருண், 25; ஓட்டினார்.


நேற்று மாலை 4: 00 மணியளவில் மணலுார் பேட்டை சாலையில், சொரையப்பட்டு ஏரி அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில் பழனி, 65; என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.


காயம் அடைந்த 10 பேர் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


இதில் டிரைவர் அருண், நாகமணி, 60; விஜயலட்சுமி, சிவா மனைவி உமா, 25; மகள் பிரபாவதி, 3; ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


மணலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி