கிணற்றில் விழுந்த விவசாயி மீட்பு

82பார்த்தது
ரிஷிவந்தியத்தில் விளைநில கிணற்றில் விழுந்த விவசாயியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் பாண்டியன், 42; விவசாயி. இவர் நேற்று காலை 7 மணியளவில் வழக்கம்போல் விளைநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு கால் தவறி 20அடி ஆழமுள்ள விளைநில கிணற்றில் விழுந்தார். கிணற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்துள்ளது.


தகவலறிந்த ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சங்கர் மற்றும் வீரர்கள் வல்லரசு, அறிவழகன், அசோக்குமார், நிஜாமுதின் காலை 7. 15 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு மூலம் பாண்டியனை பத்திரமாக மீட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி