இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் அதிரடி கைது

544பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது ஜம்பை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கத்தின் மகன் வினோத்(28). இவர் கடந்த ஒன்றாம் தேதி இரவு வீட்டின் முன்பு தமது ஜுபிடர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு உறங்குவதற்காக சென்று உள்ளார். பின்னர் காலை வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மணலூர்பேட்டை திருக்கோவிலூர் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது இருசக்கர வாகனத்தை ஜம்பை கிராமத்தில் இருந்து டோக் செய்தவாறு 20 கிலோ மீட்டர் திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளில் உள்ள உள்ள நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாகன திருட்டில் ஈடுபட்டது திருக்கோவிலூர் அடுத்த தாசர்புரம் பகுதியில் உள்ள தசரதன் என்பது பெரிய வந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் அவனை கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் மீட்டனர்.

இருசக்கர வாகனத்தை திருடி 20 கிலோ மீட்டர் வரை டோக் செய்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி