மொடச்சூரில் கிராம சபை கூட்டம்

79பார்த்தது
கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு தகுதியுடைய பயனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டது.

கிராம ஊராட்சி பகுதிகளில் குடிசை வீட்டில் வசிப்பவர்ளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான தகுதியடைய பயனாளிகளை தேர்வு செய்வதற்காக சிறப்பு கிராம சபை கூட்டத்தினை நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் கோபி ஒன்றியத்திற்குட்பட்ட மொடச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
ஊராட்சி செயலர் ராஜாமணி பணி மேற்பார்வையாளர் விஜயா மற்றும் வார்டு உறுப்பினர்கள் திருவேங்கடம் , வாசுகி லட்சுமனண், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதியுடைய 10 ககும் மேற்பட்ட பயனாளிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி