பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி மனித சங்கிலி

67பார்த்தது
திண்டுக்கல் MVM கல்லூரியில் 100 சதவிகிதம் பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி என் வாக்கு என் உரிமை என்ற தலைப்பில் மனித சங்கிலி நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. 100 சதவீதம் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தி என் வாக்கு என் உரிமை என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் எம். வி. எம் மகளிர் கல்லூரியில் மனித சங்கிலி இயக்கம் செவ்வாய்க்கிழமை காலை 10. 30 மணியளவில் நடைபெற்றது.

இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தொடங்கி வைத்தார். இந்த மனித சங்கிலியில் கல்லூரி மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நின்று கையில் பதாகைகள் உடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி