திண்டுக்கல் - Dindigul

திண்டுக்கல்: நிலப்பிளவால் நிலநடுக்க ஆபத்தில்லை எம். பி. தகவல்

கொடைக்கானல் கிளாவரைப்பகுதியில் ஏற்பட்ட நிலப்பிளவின் காரணமாக நிலநடுக்க ஆபத்தில்லை என்று ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கை தெரிவிப்பதாக திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம்; தெரிவித்துள்ளார். புதனன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும் போது, கொடைக்கானல் கிளாவரை பகுதியில் நிலப்பிளவு ஏற்பட்டது தொடர்பாக நானும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமாரும் அங்கு சென்று அந்த மக்களைச் சந்தித்து பேசினோம். அந்த இடத்தை பார்வையிட்டோம். மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் அந்த ஓடைத் தண்ணீர் எங்கு செல்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. நிலநடுக்கம் போன்ற ஆபத்து இல்லை. ஆனால் அந்த ஆற்றின் தண்ணீர் நிலத்திற்குள் சர்குலேட் ஆகி நிலத்தின் ஆழத்தில் செல்வது ஆபத்தானது, மண் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்கள். அந்த ஆற்றின் தண்ணீரை அந்த பகுதி மக்கள் குடிநீராகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே அவர்களது நீர் தேவை எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக உடனடியாக செய்ய வேண்டிய பணிகள், தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் நீண்ட காலத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் என்று ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து நமது மாவட்ட ஆட்சியருடன் கலந்து பேசி அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என ஆர். சச்சிதானந்தம் தெரிவித்தார்.

வீடியோஸ்


திண்டுக்கல்
Oct 10, 2024, 03:10 IST/திண்டுக்கல்
திண்டுக்கல்

திண்டுக்கல்: நிலப்பிளவால் நிலநடுக்க ஆபத்தில்லை எம். பி. தகவல்

Oct 10, 2024, 03:10 IST
கொடைக்கானல் கிளாவரைப்பகுதியில் ஏற்பட்ட நிலப்பிளவின் காரணமாக நிலநடுக்க ஆபத்தில்லை என்று ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கை தெரிவிப்பதாக திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம்; தெரிவித்துள்ளார். புதனன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும் போது, கொடைக்கானல் கிளாவரை பகுதியில் நிலப்பிளவு ஏற்பட்டது தொடர்பாக நானும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமாரும் அங்கு சென்று அந்த மக்களைச் சந்தித்து பேசினோம். அந்த இடத்தை பார்வையிட்டோம். மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் அந்த ஓடைத் தண்ணீர் எங்கு செல்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. நிலநடுக்கம் போன்ற ஆபத்து இல்லை. ஆனால் அந்த ஆற்றின் தண்ணீர் நிலத்திற்குள் சர்குலேட் ஆகி நிலத்தின் ஆழத்தில் செல்வது ஆபத்தானது, மண் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்கள். அந்த ஆற்றின் தண்ணீரை அந்த பகுதி மக்கள் குடிநீராகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே அவர்களது நீர் தேவை எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக உடனடியாக செய்ய வேண்டிய பணிகள், தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் நீண்ட காலத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் என்று ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து நமது மாவட்ட ஆட்சியருடன் கலந்து பேசி அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என ஆர். சச்சிதானந்தம் தெரிவித்தார்.