திண்டுக்கல் - Dindigul

ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல்

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய நான்கு பேர் கைது. திண்டுக்கல் வேடப்பட்டி ஆசாத் நகரை சேர்ந்தவர் முஜீப் ரஹ்மான் வயது 35. ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று இரவு திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது முஜீப் ரகுமானிடம் சிலர் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதில் காயம் அடைந்த முஜிப் ரகுமான் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக புதன்கிழமை மதியம் 1 மணி அளவில் கண்ணார்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் வீராசாமி, ராஜா, திருமலைசாமிபுறம் ஆண்டி சாமி, குள்ளனம்பட்டி மணிகண்டன் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


திண்டுக்கல்
May 02, 2024, 04:05 IST/ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரம்

மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

May 02, 2024, 04:05 IST
தாண்டிக்குடி அருகே புல்லாவெளி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே புல்லா வெளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பாரதிராஜா வயது 38. இவர் தேன் எடுக்கும் தொழிலாளி. புதன்கிழமை காலை 9 மணி அளவில் நண்பருடன் தேன் எடுக்க அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். 200 அடி உயரம் உள்ள இலவம்பஞ்சு மரத்தில் ஏறி தேன் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து பாரதிராஜா கீழே விழுந்தார். இதில் கை கால் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். இதனை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவிற்கு சசிக்கலா என்ற மனைவியும் 17 வயது மகளும் 14 வயது மகனும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.