ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அழிந்து வரும் தேனீக்களை பாதுகாக்க உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சுறுசுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மே 20 ஆம் தேதியை உலக தேனீக்கள் தினமாக ஒரு மனதாக அறிவித்தது. இந்நாளில் கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பிரச்சார நிகழ்வுகள் உலகளவில் நடத்தப்படுகின்றன.