அரூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

51பார்த்தது
அரூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
அரூரில் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரூர் அரசு மருத்துவமனை வளா கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அரசு பள்ளி ஆசிரியர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். ஸ்ரீ அம்மன் போலீஸ் பயிற்சி மைய நிறுவனர் தென்னரசு அழகேசன், வக்கீல் இளங்கோ, வி, சி. , ஒன்றிய செய லாளர் மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ரத்த தான முகாமை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி துவக்கி வைத்தார். நிகழ்ச் சியில், பல்வேறு அரசியல் கட்சி யினர், முக்கிய பிரமுகர்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி