விஜய் சொன்னதை தண்ணீரில்தான் எழுத வேண்டும் - தமிழிசை

57பார்த்தது
விஜய் சொன்னதை தண்ணீரில்தான் எழுத வேண்டும் - தமிழிசை
விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், இது அவரின் கடைசி படமா என்பதுதான் தெரியவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவர்கள் சொல்வதையெல்லாம் தண்ணீரில்தான் எழுத வேண்டும். மாநாட்டை விஜய் சிறப்பாக நடத்திவிடுவார்; சினிமாத்துறையினருக்கு கூட்டம் கூடிவிடும். மக்கள் சினிமாவுக்கு வருவதுபோல் வந்துவிடுவார்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி