பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில் நினைவஞ்சலி

570பார்த்தது
பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில் நினைவஞ்சலி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒன்பது வயது சிறுமி ஆர்த்திக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

மகளிர் தினத்தன்று ஆம் ஆத்மி கட்சி மகளிரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவஞ்சலியில் மாநில மகளிரணி துணை செயலாளர் கௌரி பாபு தலைமை தாங்கினார். பண்ருட்டி தொகுதியை சேர்ந்த மாநில துணைச் செயலாளர் (தகவல் தொழில்நுட்ப பிரிவு) பாக்யராஜ் முன்னிலை வகித்தார். ஆம் ஆத்மி கட்சி மண்டல தலைவர் இயன்முறை மருத்துவர் தேவகுமார் சிறப்பித்தார். கடலூர் மாவட்ட ஓட்டுனர் பிரிவு செயலாளர் வெற்றி, புவனகிரி தொகுதி செயலாளர் கிருஷ்ண பெருமாள், கடலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வசந்த ராஜா, திருப்பிபூமிநாதன் மாவட்ட தலைவர் வணிகப்பிரிவு, திரு செந்தில் பண்ருட்டி தொகுதி துணைத் தலைவர், மாயா பண்ருட்டி ஒன்றிய செயலாளர், புண்ணியமூர்த்தி ஒன்றிய இளைஞரணி செயலாளர், மாலா ஒன்றிய மகளிர் அணி செயலாளர், அருள்மொழி பண்ருட்டி தொகுதி மகளிர் அணி துணை செயலாளர், விஜயலட்சுமி உறுப்பினர், சௌமியா உறுப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி