விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின்போது பொய்யான கல்வித்தகுதியை கூறி மோசடி செய்ததாக கூறி கணவரிடம் விவாகரத்து கோரி மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி 2014-ம் ஆண்டு திருச்சி குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.