ரோட்டரி கிளப் ஆப் டவுன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

75பார்த்தது
கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள ரத்னா ரெசிடென்சி ஹோட்டலில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் பத்தாவது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சாணக்யா சிஇஓ மற்றும் நிறுவனர் ஆர். ரங்கராஜ் பாண்டே மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சம்பா பப்ளிஷிங் கம்பெனியின் இயக்குனர் ஆர். எஸ் மாருதி ஆகியோர் கலந்துகொண்டு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுற்கான புதிய நிர்வாகிகளை பதவியேற்று வைத்தனர்.

ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன் தலைவராக விவேகானந்தன், செயலாளர் பிரபு, பொருளாளர் பரமசிவம் ஆகியோர் 2024-25 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றனர்.

மேலும் இந்த கிளப்பின் உறுப்பினர்களுக்கு புதிய தலைவர் விவேகானந்தன் கிளப்பின் பொத்தானை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து முதல் திட்டமாக கோவை அரசு மருத்துவமனைக்கு வாஷிங் மெஷின் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையையும் வழங்கினர். பின்னர் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் 2024, -25 ஆம் ஆண்டிற்கான கையேடுகளை சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.

இந்நிகழ்வில், உதவி ஆளுநர் கவிதா கோபாலகிருஷ்ணன், ஜி ஜி ஆர் வித்யா ரமேஷ், பிரேம்குமார் முத்து, பிரபு மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி