அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று ஆய்வு செய்த போலீசார், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.