வங்கதேச எம்.பி. அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுப்பு

70பார்த்தது
வங்கதேச எம்.பி. அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுப்பு
மேற்குவங்கத்தில் மாயமான வங்கதேச நாட்டைச் சேர்ந்த எம்.பி. அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக, வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வந்திருந்த எம்.பி. அன்வருல் அசீம், காணாமல் போனார். 14ஆம் தேதிக்கு பின், அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நியூ டவுன் பகுதியில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அன்வருல் அசீம் கொலை செய்யப்பட்டுள்ளரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைநகர் தாக்காவில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி