முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 9 நிலைகளுடன் கூடிய தேர் அலங்கரிக்கப்பட்ட கலசம் ஏற்றப்பட்டு வண்ண துணிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட தேரானது மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து கேரளாவில் இருந்த வந்த சாது(57) ஆண் யாணையின் உதவியால் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களால் வடம் பிடித்து துவங்கிய தேர் பழனி சாலை, தளி ரோடு, குட்டை திடல் தலைகொண்ட அம்மன் கோவில்வீதி, கொல்லம்பட்டறை வழியாக வந்து மாரியம்மன் கோவிலை அடைந்தது.
தேர்திருவிழாவில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அதிகளவில் வருகை அம்மனை தரிசனம் செய்தனர். உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உடுமலை- பழனி, பொள்ளாச்சி தேசிய நெடுஞ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில்
500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.