கொளுத்தி எடுக்கும் வெயில்: ஈரோடு முதலிடம்

596பார்த்தது
கொளுத்தி எடுக்கும் வெயில்: ஈரோடு முதலிடம்
தமிழகத்தில் எப்போதும் மே மாதம் உச்சத்தை அடையும் கோடை வெயில், இந்த வருடம் ஏப்ரலிலேயே உச்சத்தை தொட்டு இருக்கிறது. இன்று(ஏப்.25) 5:30 மணி நிலவரப்படி, ஈரோடு மாவட்டத்தில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் 41.8 டிகிரியுடன் திருப்பத்தூரும், 41.7 டிகிரியுடன் சேலமும், 41.5 டிகிரியுடன் கரூர் பரமத்தியும் உள்ளது. வேலூர், திருச்சி, திருத்தணி, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி