பெங்களூரில் வாக்களிபவர்களுக்கு பட்டர் தோசை, பீர் இலவசம்

79பார்த்தது
பெங்களூரில் வாக்களிபவர்களுக்கு பட்டர் தோசை, பீர் இலவசம்
கர்நாடகாவில் நாளை (ஏப்ரல் 25) நடைபெறவுள்ள நிலையில் பெங்களூரில் உள்ள நிறுவனங்கள் வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி, நிசர்கா கிராண்ட் ஹோட்டல், இலவச பட்டர் தோசை, நெய் சோறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது. பெல்லந்தூரில் உள்ள டெக் ஆப் ப்ரூஸ் மது கடை, ஒரு குவளை பீர் இலவசமாக வழங்கவுள்ளது. பல்வேறு இடங்களில் மதுபான விடுதியைக் கொண்டுள்ள சோசியல் நிறுவனம், வாக்களித்த மை விரலைக் காண்பித்தால் 20 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கிறது. ரேபிடோ பைக் டாக்சி, முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்கச் செல்ல இலவச சேவையை வழங்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி