பெற்றோர் அலட்சியம்: காருக்குள் சிக்கி இரு குழந்தைகள் பலி

75பார்த்தது
பெற்றோர் அலட்சியம்: காருக்குள் சிக்கி இரு குழந்தைகள் பலி
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஆன்டோ ஹில் பகுதியில் நேற்று(ஏப்ரல் 24) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த முஸ்கான் மொஹபத் ஷேக் (5), சஜித் முகமது ஷேக் (7) என்ற இரு குழந்தைகள் காணாமல் போயினர். இந்த நிலையில் இன்று வெகு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த காரில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். உடலில் ஏதும் காயம் இல்லாத நிலையில் காரின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு, கண்ணாடிகள் கூட திறக்க முடியாததால், குழந்தைகள் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி