நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலையில் அதிர்ச்சி தகவல்

80பார்த்தது
நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலையில் அதிர்ச்சி தகவல்
புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2, சாக்கு மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி