ஒரு நாள் இலவச சேவை - ரேபிடோ அறிவிப்பு

65பார்த்தது
ஒரு நாள் இலவச சேவை - ரேபிடோ அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 14 தொகுதிகளில் நாளை(ஏப்.26) நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நாளை ஒருநாள் ரேபிடோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ரேபிடோ இணை நிறுவனர் பவன் குண்டு பள்ளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி