விசாரணைக்கு ஒத்துழைக்க செந்தில் பாலாஜி மறுப்பு

25207பார்த்தது
விசாரணைக்கு ஒத்துழைக்க செந்தில் பாலாஜி மறுப்பு
செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 11 மாதங்களாக புழல் சிறையில் உள்ளார். அதே போல் 35வது முறையாக வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி