பொய்களை பரப்பக் கூடாது - மோடிக்கு கார்கே கடிதம்

57பார்த்தது
பொய்களை பரப்பக் கூடாது - மோடிக்கு கார்கே கடிதம்
நாட்டின் பிரதமர் என்ற முறையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்பதற்காகவே, நேரில் சந்தித்து விளக்கம் தர விரும்புகிறேன்.அதற்கான நேரத்தை ஒதுக்குங்க என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று (ஏப்ரல் 25, வியாழக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.தேர்தல் பிரசாரத்தின் போது, ​​'சொத்து மறுபங்கீடு' மற்றும் 'பரம்பரை வரி' தொடர்பாக, காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து, கார்கே இந்த கடிதத்தை எழுதியுள்ளார். மக்களின் சொத்துக்களை அபகரித்து 'முஸ்லிம் சமூகத்தினருக்கு' பகிர்ந்தளிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் சமீபத்திய தேர்தல் கூட்டங்களில் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி